கொழும்பு வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் இன்று (18) மாலை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் சிலர் குழப்பம் விளைவிக்க முற்பட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் கலந்துகொண்டதாகவும் இதன்போது சிங்கள அமைப்புகளைச் சேர்ந்த சிலர், தகாத வார்த்தைகளை வெளிப்படுத்தியதாகவும் இதனால் அங்கு குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது
