கொழும்பு கங்காராம விகாரையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘புத்த ரஷ்மி வெசாக் வலயம்’ (Buddha Rashmi Vesak Zone) தொடர்பான இறுதிக்கட்டக் கலந்துரையாடல், நேற்று (20) அலரி மாளிகையில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தலைமையில் நடைபெற்றது.
நடப்பு ஆண்டுக்கான வெசாக் வலயத்தின் முன்னேற்பாடுகள், பாதுகாப்பு மற்றும் மின்சக்திப் பயன்பாடு குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
வெசாக் பண்டிகைக் காலப்பகுதியை முன்னிட்டு, நாட்டின் எரிபொருள் மற்றும் மின்சாரப் பயன்பாட்டிற்காக அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்வு செய்வது குறித்து இக்கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.அத்துடன், வெசாக் வலயப் பணிகளை வெற்றிகரமாக ஒருங்கிணைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் விபரங்களும் இதன்போது பெற்றுக் கொள்ளப்பட்டன.
தற்போதைய நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை எரிபொருள் மற்றும் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
