Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அரசியலாக்கப்படுகிறது. என நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு!

வைகாசி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  விசாரணை நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் தீவிரமாக அரசியலாக்கி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், இந்த ஒட்டுமொத்தச் சம்பவத்தின் “கடைசி நூல்” மக்கள் விடுதலை முன்னணிவசமே உள்ளது என்பது தற்போது தெளிவாகியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் விசாரணை முறைகள் குறித்து நாமல் ராஜபக்ச கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

ஞாயிறு தாக்குதலின் கோப்புகளை (Files) மூடிமறைத்த அதிகாரிக்கு பதவியுயர்வு வழங்கி, அதே அதிகாரியை அனுப்பி வாக்குமூலம் எழுதி வாங்குவதாக அவர் சாடினார்.

இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியவர்களின் பெற்றோர்கள் மக்கள் விடுதலை முன்னணியின் தீவிர உறுப்பினர்கள் என்றும், தாக்குதல் நடத்தியவரின் தந்தை JVP இன் தேசியப் பட்டியலில் இருந்த ஒரு நபர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தங்களிடம் இருப்பதாகக் கூறிய சாட்சிகளை அவர்கள் ஏன் இன்னும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை?” என அவர் கேள்வி எழுப்பினார்.

மிரட்டி, வலுக்கட்டாயமாக வாக்குமூலங்களை எழுதி வாங்கி, மனித உயிர்கள் இழந்திருக்கும் நிலையிலும், அதன் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற முயற்சிக்கிறார்கள் எனச் சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ச, இதிலிருந்தே இந்நாட்டின் சட்டம் யாருடைய தேவைக்காகவும், யாருடைய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காகவும் செயல்படுகிறது என்பது தெளிவாகப் புரிகிறது எனத் தெரிவித்தார்.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் பயணித்த கார் விபத்து – 10 பேர் காயம்!

வைகாசி 10, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்விளையாட்டு

இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை சந்தித்தார் தமிழக முதல்வர்!

ஆனி 8, 2026
இந்தியாதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

இந்த விலைக்கு இப்படி ஒரு 5G Phone ஆ? Lava Shock கொடுத்தது!

வைகாசி 19, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

ராஜ்மோகனுக்கு திரைப்படத் துறை இலாகா ஒதுக்கப்பட்டது வருத்தமளிக்கிறது- நடிகர் விஷால்

வைகாசி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube