பாடசாலை மாணவர்களிடையே வைரஸ் மெனிஞ்சைடிஸ் நோய் நிலைமை பரவி வருகின்ற போதிலும், அது குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தொற்றுநோயியல் நிபுணர் விசேட மருத்துவர் பாலித கருணாபேம இதனைத் தெரிவித்துள்ளார்.
தெனியாய பகுதியில் அவதானிக்கப்பட்ட மெனிஞ்சைடிஸ் எனப்படும் இந்த மூளைக்காய்ச்சல் நோய் நிலைமை, தற்போது மேலும் சில பகுதிகளில் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி, தியத்தலாவையில் 28 நோயாளர்களும், வெலிமடையில் 13 நோயாளர்களும், ரிகில்லகஸ்கட பகுதியில் 25 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
இந்த நிலையில், இது ஒரு வைரஸ் மெனிஞ்சைடிஸ் நிலைமை என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மாகாண சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து உரிய ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விசேட மருத்துவ நிபுணர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது நிலவும் மழைக்காலம் மற்றும் விசாக பண்டியை காலத்தில் தானசாலைகள் குறித்தும் அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, இந்த நோய் அசுத்தமான நீர் மற்றும் உணவு மூலமே பரவுவதால் அவதானமாக இருக்குமாறும், முறையான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் விசேட மருத்துவர் நிபுணர் பாலித கருணாபேம அறிவியுறுத்தியுள்ளார்.
