டிக்கோயா நகர்ப் பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர தெரிவித்தார்.
குறித்த நபர், பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டு இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேக நபரிடமிருந்து சில தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேக நபர் தொடர் விசாரணைக்காக ஹட்டன் மத்திய பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
