மறைந்த பிரபல பாடகி மரியசெல் குணதிலக்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (13) காலை இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவரது பூதவுடல் இன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பொரளை Barney Raymond மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இறுதிக் கிரியைகள் இன்று மாலை 5.00 மணிக்கு பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.
பல தசாப்தங்களாக இலங்கை இசைத்துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றிருந்த மரியசெல் குணதிலக்க, கடந்த 10ஆம் திகதி சுகயீனம் காரணமாக களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு 68 வயதாகும். “கண்டி லமிஸ்ஸி”, “ரஹசයි சொந்துரு ஜீவிதே”, “சிஹின நெலும் மல்” உள்ளிட்ட பல பிரபல பாடல்களை அவர் ரசிகர்களுக்கு வழங்கியிருந்தார்.
