இந்தியாவில் மீண்டும் இன்று (25) எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு வாரங்களில் இன்றோடு நான்காவது முறையாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இன்றைய விலை அதிகரிப்பின் படி , பெட்ரோல் விலை லீட்டருக்கு 2.46 சதத்தாலும், டீசல் 2.57 சதத்தாலும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் சென்னையில் ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு 107.77 ரூபாயும் எனவும் ஒரு லீட்டர் டீசலுக்கு 99.55 ரூபாயும் அரவிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச்சூழல் காரணமாகவும் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாலும் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மசகு எண்ணெய் விலை பீப்பாய்க்கு 105 டொலரை கடந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக பல நாடுகளில் எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது.
