இரு பெண்களின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர், 3 வருடங்களின் பின்னர் கடந்த சனிக்கிழமை மதுகம – வெலிகந்த பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு (24) ஞாயிற்றுக்கிழமை லிந்துலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கொழும் – ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான மகேஷ் அசலங்க டி சொய்சா என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில், எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
தலவாக்கலை கிரேட் வெஸ்டன் (Great Western) மலையின் உச்சியில் (2023) ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி பெண்ணொருவரின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த சந்தேக நபரும் , தலங்கம பொலிஸ் பிரிவில் 57 வயதான பெண்ணொருவரை கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மத்திய மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தலைமையிலான குழுவினரே குறித்த இரட்டை கொலை சம்பவங்களுடன்தொடர்புடைய நபரை கைதுசெய்துள்ளனர். பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களை அடிப்படையாகக்கொண்டு இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து லிந்துலை பொலிஸார் தடுப்புக்காவல் உத்தரவில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில் இன்று (26) நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் சட்டவைத்திய அதிகாரியின் (JMO) பரிசோதனையை மேற்கொண்டு பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர் வரும் ஜூன் மாதம்(9) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரு கொலை தொடர்பில் தொடர்ந்து லிந்துலை பொலிஸார் மற்றும் தலங்கம பொலிஸார் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
