தாய்லாந்தில் ஒன்பது வளர்ந்த யானைகளின் எடையைக் கொண்ட “நாகாடைட்டன் சாயாபுமென்சிஸ்” (Nagatitan chaiyaphumensis) எனும் புதிய வகை இராட்சத டைனோசர் இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சுமார் 100 முதல் 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகக் கருதப்படும் இந்த இனம், தென்கிழக்கு ஆசியாவில் இதுவரை கண்டறியப்பட்டவற்றில் மிகப்பெரியது என ‘சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்’ (Scientific Reports) இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
நீண்ட கழுத்து மற்றும் வால் கொண்ட ‘சோரோபாட்’ (Sauropod) குடும்பத்தைச் சேர்ந்த இந்தத் தாவரவுண்ணி, சுமார் 27 மீற்றர் நீளமும் 27 தொன் எடையும் கொண்டதாக இருந்துள்ளது.
லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர் திதிவூட் சேதாபனிச்சாகுல் தலைமையிலான குழுவினர் இதனை “இறுதி டைட்டன்” (The Last Titan) என அழைக்கின்றனர்.
கிரெட்டேசியஸ் காலத்தில் இப்பகுதி ஆழமற்ற கடலாக மாறியதால், அங்கு வாழ்ந்த கடைசி இராட்சத இனம் இதுவென அவர்கள் கருதுகின்றனர்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ளூர் மக்களால் முதன்முதலில் கண்டறியப்பட்ட இதன் எஞ்சிய பாகங்கள், 2024 ஆம் ஆண்டிலேயே முழுமையாக அகழ்வாராய்ச்சி செய்து முடிக்கப்பட்டன.
ஆசியப் பாரம்பரியத்தில் போற்றப்படும் ‘நாகா’ (Naga) எனும் பாம்புக் கடவுளின் பெயரால் இது அழைக்கப்படுகின்றது.
இதன் முழு உருவ மாதிரிக் கட்டமைப்பு தற்போது பாங்காக்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
