4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள குருவிட்ட, இரத்தினபுர, அயகம மற்றும் எஹெலியகொட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் மத்துகம மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தில் தெரணியாகல, யட்டியாந்தோட்டை, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் புலத்கொஹூபிட்டிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் எலபாத, நிவித்திகல, பெல்மடுல்ல, கிரியெல்ல மற்றும் கலவான பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, களுகங்கையை அண்மித்துள்ள, மில்லகந்த பகுதிக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கையும் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
