தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவானால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணிக்கு ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் ஜயந்த சமரவீர பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவரை கைது செய்ய, கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இவ்வாறு பிடியாணை உத்தரவு விடுத்துள்ளார்.
மேற்கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு இன்று (27) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும், இன்று ஜயந்த சமரவீர நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதன் காரணமாக அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.
