நாட்டுக்கு 89,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் ஏற்றிய கப்பலொன்று வருகை தரவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து இந்த மசகு எண்ணெய் ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து 95,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி நாட்டை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரு கப்பல்களினதும் வருகையின் மூலம் இலங்கைக்கு மொத்தமாக 184,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் கிடைக்கப்பெறவுள்ளது.
