டித்வா புயலினால் பொது இடங்களுக்கு ஏற்பட்ட சேதங்களை அதிகாரிகள் முறையாகச் செயல்படாததன் காரணமாகவே இதுவரை சீரமைக்க முடியாமல் போயுள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.
சில பொது இடங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை முறையான மதிப்பீடுகள் கூட செய்யப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டித்வா புயலினால் சேதமடைந்த உமா எல மகா நீர்ப்பாசனக் கால்வாய் மறுசீரமைப்புப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் சமந்த வித்யாரத்ன இதனைத் தெரிவித்தார்
