நெடுமங்காடு, கேரளா பகுதியில் ஒன்றரை வயது குழந்தை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர், குழந்தைக்கு சோறு ஊட்டும்போது அழுததால் கோபத்தில் தலையை சுவரில் மோதியதாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரேதப் பரிசோதனையின் ஆரம்ப அறிக்கையின்படி, தலையில் ஏற்பட்ட கடுமையான காயமே குழந்தையின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்துள்ளது. மேலும், குழந்தையின் உடலில் பழைய காயங்களின் அடையாளங்களும் கண்டறியப்பட்டுள்ளதால், நீண்டகால உடல் துன்புறுத்தல் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
