அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிரே வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
பூண்டுலோயா – தவலந்தென்ன பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த விபத்தையடுத்து, லொறியின் அடியில் சிக்கியிருந்த மோட்டார் சைக்கிள் சாரதியை பிரதேசவாசிகள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் மீட்டெடுத்துள்ளனர்.
அவர் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
