எரிபொருள் மற்றும் உரம் விலைகள் விரைவில் குறையும் என எதிர்பார்ப்பதாக, அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தின் சிப்பேவா பால்ஸ் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மக்களிடம் கருத்து தெரிவித்த அவர் ” நாம் ஈரான் விவகாரத்தில் இருந்து மிக விரைவாக வெளியே வரப்போகிறோம்.
அது ஒரு உடன்படிக்கை மூலமாகவோ அல்லது மிகவும் கடினமான ஒரு வழிமுறையின் மூலமாகவோ, ஏதோ ஒரு வழியில் மிகவும் வலுவானதாக இருக்கப்போகிறது”
“சரி, அந்த மிகவும் கடினமான வழிமுறைதான் எளிதான வழியாகவும் இருக்கலாம். ஆனால் நாம் இதில் இருந்து வெளியே வரும்போது, உங்களுடைய உரம் விலைகள் நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்தது போல குறைவாக கிடைக்கும்.
உரம், எரிசக்தி, எண்ணெய் மற்றும் எரிவாயு என அனைத்தும் விலை குறையப் போகிறது.” என குறிப்பிட்டுள்ளார்.
