மலேசியாவின் சபாவில் உள்ள கடற்கரை கிராமம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் 200 வீடுகள் முற்றாக எரிந்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று ஞாயிற்றுக்கிழமை குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் வீடுகள் அடர்த்தியாக காணப்படுவதாலும், சாலைகளின் நிலை மற்றும் பலத்த காற்று காரணமாக தீயைக் கட்டுப்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீ விபத்தில் 89 குடும்பங்களைச் சேர்ந்த 445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
