நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள நாட்டின் முக்கியமான 73 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் தற்போது 63 சதவீத அளவிலான நீர் சேமிப்பு காணப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், எதிர்வரும் பருவச் செய்கைகளுக்குத் தேவையான நீரை முறையான வகையில் விநியோகிக்கக் கூடிய நிலைமை காணப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மாவட்ட வாரியாக பிரதான நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் இருப்பு நிலவரம் வருமாறு:
அனுராதபுரம் – 81%
குருணாகல் – 86%
புத்தளம் – 93%
கண்டி – 93%
பதுளை – 74%
மொனராகலை – 76%
மன்னார் – 76%
காலி – 72%
பொலன்னறுவை – 71%
திருகோணமலை – 68%
மாத்தளை – 49%
அம்பாறை – 41%
இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் மழைவீழ்ச்சி குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், கிடைக்கப்பெற்றுள்ள நீர் வளங்களை மிகுந்த சிக்கனத்துடனும் பொறுப்புடனும் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் நீர்ப்பாசனத் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
