அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்பெத்தாவ பகுதியில் இளைஞர் ஒருவர் தடியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (08) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த நபருக்கும் அவரது மனைவியின் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், மாமனார் தடியால் தாக்கியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் மாமடல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மாமனார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
