மொனராகலை – மெதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்புகன் ஆற்றில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (07) மாலை இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த போது அந்த நபர் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவரை உடனடியாக மீட்டு மெதகம வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படும் முன்னரே உயிரிழந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மெதகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ரத்தந்தெனிய பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆரம்ப விசாரணைகளின்படி, அவர் தனது தாயார் மற்றும் உறவினர்களுடன் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
சடலம் தற்போது மெதகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
