உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர், முன்னாள் புலனாய்வு அதிகாரியான சுரேஸ் சலே, நீர்கொழும்பு பகுதிக்கு ஐந்து பேரை அனுப்பி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் விசேட ஆராதனைகளில் பங்கேற்போரின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை சேகரிக்கச் செய்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரிகளுடன் சுரேஸ் சலே நேரடி தொடர்பில் இருந்ததுடன், தாக்குதலுக்குத் தேவையான உதவி மற்றும் ஒத்துழைப்புகளையும் வழங்கியுள்ளதாக அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போது கிடைத்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால சபையில் மேலும் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
