அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து, கனடா அரசாங்கமும் பாதுகாப்பான சமூக ஊடகச் சட்டமூலத்தை நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது.
கலாச்சார அமைச்சர் மார்க் மில்லர் (Marc Miller) இந்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளார். இதன் கீழ், சிறுவர்களை பாதுகாக்கும் கொள்கைகளை முறையாக நடைமுறைப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மட்டுமே தடைச் சலுகைகள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சாட்போட்களை கட்டுப்படுத்தவும், வெறுப்புப் பேச்சு, வன்முறை உள்ளிட்ட ஏழு வகையான தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை தடுக்கும் வகையில் கடுமையான விதிமுறைகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு 10 மில்லியன் கனேடிய டொலர் அல்லது அவர்களின் உலகளாவிய வருமானத்தின் 3 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க ‘கனடா டிஜிட்டல் பாதுகாப்பு ஆணைக்குழு’ என்ற சுயாதீன அமைப்பும் அமைக்கப்படவுள்ளது.
