உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுமாறு கோரியும் அது குறித்து இடம்பெறும் விசாரணைகளை மாற்றமின்றி முன்னெடுத்துச் செல்லுமாறும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டமொன்று நீர்கொழும்பில் இன்று இடம்பெற்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்து பின்னர் குணமடைந்தவர்கள், தன்னார்வ குழுவினர் பல இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
