2026 FIFA உலகக் கிண்ண ரசிகர் மண்டலத்தின் உத்தியோகபூர்வ தொடக்க நிகழ்வு நேற்று (11) கொழும்பு கோட்டையில் நடைபெற்றது.
நிகழ்வில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இலங்கையில் சர்வதேச தரத்திலான கால்பந்து அரங்கம் ஒன்றை அமைக்க FIFA ஆதரவு வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
நீர்கொழும்பு கடொல்கலே மைதானம் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், ஆரம்பகட்ட சட்ட நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்தத் திட்டம் எதிர்காலத்தில் சர்வதேச கால்பந்து போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கும், விளையாட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு மே மாத இறுதிக்குள் 10 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
