அமெரிக்க அரசாங்கம், ஈரானைச் சேர்ந்த ஜனநாயக ஆர்வலர் ஒருவரை மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்கு நாடு கடத்தியுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
அந்த நாட்டில் அவருக்கு உறவினர்களோ அல்லது அடிப்படை ஆதரவோ இல்லாத நிலையில், இந்த நடவடிக்கை அவருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இரு ஈரானியப் பெண்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படும் அபாயத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தஞ்சம் கோரியவர்களை தொடர்பில்லாத நாடுகளில் விடுவது, பின்னர் அவர்கள் மீண்டும் தாய்நாட்டுக்கு கட்டாயமாக திருப்பப்படலாம் என வழக்கறிஞர் கவலை வெளியிட்டுள்ளார்.
