யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியில் இருந்து நேற்று (16) மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டு அடையாளம் காணப்பட்டன.

இதுவரையான மூன்று கட்டங்களின் அகழ்விலும் 366 எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 357 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டுகாவலில் வைக்கப்பட்டுள்ளன.

நேற்றைய (16) அகழ்வு நடவடிக்கைகள் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் அவர்களின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டன.

