புல்மோடை பகுதியில் பெறுமதிமிக்கது தொல்பொருள் எனக் கருதப்படும் கல் ஒன்றினை சுமார் 2 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்பட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை – புல்முட்டை, தென்னமரம் பகுதியில் கடந்த ஜூன் 15 ஆம் திகதி பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி பெறுமதிமிக்க தொல்பொருள் கல் ஒன்றினை விற்பனை செய்வதற்காகத் தயாராகி இருந்த போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கல்லானது சுமார் 2 கோடி ரூபா பெறுமதியானது என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29 மற்றும் 57 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புல்முட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
