தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுவதையொட்டி மக்கள் வாக்களிப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 5 கோடியே 73 இலட்சம் வாக்காளர்களுக்கு 75064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலை 7:00 மணிமுதல் மாலை 6:00 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
மொத்தமாக 234 தொகுதிகளில் 4023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இம்முறை மக்கள் முதல்முறையாக வாக்குப்பதிவு இயந்திரங்களினூடாக வாக்களிக்கின்றனர்.
மேலும் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் 1 இலட்சத்து 40 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்றுமாலை வாக்குப்பதிவுகள் நிறைவடைந்தபின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு காந்திக்கு செல்லப்பட்டு மே மாதம் 4 ஆம் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
