யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண நகரை அண்மித்த பிரதான வீதியில் அருச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை வைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துதல், சபை நாகரிகத்திற்கு முரணாக நடந்து கொள்ளுதல் மற்றும் கூட்டங்களை குழப்பும் வகையிலான செயற்பாடுகளில் அருச்சுனா இராமநாதன் ஈடுபட்டு வருவதாக பல்வேறு தரப்பினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற தெல்லிப்பளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி, கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.
இந்தப் பின்னணியில், அருச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, பிரதான வீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
