வடமத்திய மாகாண குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (18) பகல் வேளையில் மிகிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அசோகபுர சந்தியில் வடமத்திய மாகாண குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரிடமிருந்து 149 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், அவர் மிகிந்தலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மிகிந்தலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் எனக் கூறும் மிகிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
