நாட்டிற்கு தேவையான எதிர்கால தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டுமாயின், அழகியல் மற்றும் விளையாட்டு போன்ற துறைகளின் மூலம் கிடைக்கும் அனுபவத்தை ஆரம்பக் கல்விப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
குருணாகல் மாவட்டத்தில் கல்விசார் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர், நேற்று முன்தினம் பொல்பிதிகம தேசிய பாடசாலையில் நடைபெற்ற “புஞ்சி ஹப்பன்னு 2026” ஆரம்பப் பிரிவு இலக்கியத் திறன் மதிப்பீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.
பொல்பிதிகம வலயக் கல்விப் பணிப்பாளரின் கருத்தாக்கத்திற்கு அமைவாக, அந்த வலயத்திலுள்ள 49 ஆரம்பப் பாடசாலைகளின் மாணவர்கள் பங்கேற்ற இந்த “புஞ்சி ஹப்பன்னு 2026” மொழி மற்றும் இலக்கியத் திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டுவதற்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
17 வகையான போட்டி பிரிவுகளின் கீழ் வெற்றி பெற்ற மாணவர்களின் அழகியல் செயற்பாடுகள் நிகழ்வை மேலும் சிறப்பாக அலங்கரித்தன.
