தேசிய சுற்றாடல் தினம் மற்றும் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சிரமதான நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து நடத்திய இந்த சிரமதான நிகழ்வு இன்று (19) மாவட்ட செயலக வளாகத்திலும் அதனை அண்டிய சுற்றுப்புற பகுதிகளிலும் நடைபெற்றது.
டெங்கு ஒழிப்பை பிரதான நோக்கமாகக் கொண்டு, வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பொலித்தீன் பைகள் உள்ளிட்ட கழிவுகள் அகற்றப்பட்டன.
சூழல் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இடம்பெற்ற இந்த நிகழ்வு மாவட்ட மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
