கொழும்பு- கட்டுநாயக்கா அதிவேக வீதியில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகளின் செப்புக்கம்பிகள் திருட்டுகும்பலினால் வெட்டப்பட்டுள்ள நிலையில், இவற்றினை புதுப்பிக்க ரூ. 1.09 பில்லியன் மதிப்பிலான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இவ்வாறு சேதப்படுத்தல் மற்றும் செம்புக் கம்பிகள் உள்ளிட்ட மின்சார உபகரணங்கள் திருடப்படுதல் காரணமாக, இந்த அதிவேக நெடுஞ்சாலையின் மின்விளக்கு அமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது சுமார் 85% மின்விளக்குகள் செயலிழந்துள்ளன. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ. 1,098.50 மில்லியன் ஆகும். ஒப்பந்ததாரர்கள் தேசிய போட்டித் டெண்டர் (National Competitive Bidding) முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
