ஈரான் புரட்சிகர காவல்படையின் கடற்படைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பில், லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி வருவதாக ஈரான் ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், ஹோர்மூஸ் நீரிணையை நோக்கிச் செல்லும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், “நீரிணையை நெருங்க வேண்டாம்; எச்சரிக்கையை மீறினால் உங்கள் பாதுகாப்புக்கு நீங்களே பொறுப்பாக இருப்பீர்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
