எரிபொருள் விநியோகத்திற்காக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் கியூஆர் (QR) குறியீடு முறைமை நீக்கப்படமாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் எரிபொருள் நுகர்வை மிகவும் பயனுள்ள மற்றும் முறையான வகையில் நிர்வகிக்கும் நோக்கிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
உலக சந்தை நிலவரங்கள் குறித்து கருத்து வெளியிட்ட தலைவர், உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்த வேகத்துடன் ஒப்பிடுகையில், தற்போது விலைகள் அந்தளவுக்கு வீழ்ச்சியடையவில்லை என்றும், விலைகள் தொடர்ந்தும் ஏற்ற இறக்கங்களுடனேயே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், நுகர்வோர் எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு தற்போது எவ்வித தடைகளோ அல்லது தட்டுப்பாடுகளோ இல்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
