லெபனானில் இஸ்ரேலிய படையினர் நடத்திய கொடிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு, ஜெனிவாவிற்கான ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானிய தூதுவர் அலி பஹ்ரைனி (Ali Bahreini) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
லெபனானில் ஏற்படுத்தப்பட்டுள்ள உடன்படிக்கைகளை மீறும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையும், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என அவர் எச்சரித்துள்ளார்.
லெபனான் என்பது இந்த அமைதி உடன்படிக்கையின் ஒரு முக்கிய அங்கமாகும் என்பதால், அங்கு நடக்கும் சம்பவங்கள் ஒட்டுமொத்த செயல்முறையையும் பாதிக்கும் என்றும், இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்துவதற்கு அமெரிக்கா தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்துத் தெரிவிக்கையில், வடக்கு பகுதியில் உள்ள இஸ்ரேலிய குடிமக்கள் அல்லது படையினருக்கு ஹிஸ்புல்லா அமைப்பினரால் ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலையும் முறியடிப்பதற்கு இஸ்ரேலியப் படைகளுக்கு “முழுமையான சுதந்திரம்” வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தேவைப்படும் வரை இஸ்ரேலியப் படைகள் தெற்கு லெபனானைத் தொடர்ந்து ஆக்கிரமித்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
