கெப்பற்றிபொல பகுதியில் ரம்புட்டான் பழம் சாப்பிட்ட 7 வயது சிறுவன் ஒருவன், அதன் விதை தொண்டையில் சிக்கியதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரம்புட்டான் பருவம் தொடங்கியுள்ள நிலையில் இடம்பெற்ற இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெற்றோர்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
சிறு பிள்ளைகளுக்கு ரம்புட்டான், நெல்லி, மாம்பழம் உள்ளிட்ட கொட்டைகள் அல்லது விதைகள் உள்ள பழங்களை வழங்கும் போது, அவற்றின் விதைகளை முழுமையாக அகற்றிய பின்னரே கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகள் பழங்களை உண்ணும் நேரத்தில் ஓடுதல், விளையாடுதல் அல்லது பேசிக்கொண்டு சாப்பிடுதல் போன்ற செயல்களைத் தவிர்க்கச் செய்து, பெற்றோர் நேரடி கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு கண நேர அலட்சியம் கூட குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பெற்றோர் எப்போதும் அதிக அவதானத்துடன் செயல்பட வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
