மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்காராம மாவத்தை பகுதியில் நேற்று (26) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்குளி பொலிஸ் அதிகாரிகள் நடத்திய இந்த நடவடிக்கையில், சந்தேகநபரிடம் இருந்து ஹெரோயின் 199 கிராம் 680 மில்லிகிராமும், ஐஸ் போதைப்பொருள் 10 கிராம் 170 மில்லிகிராமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 23 வயதுடைய, கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
