சஹஸ்புர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்கஹவத்த பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் நேற்று (27) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று சஹஸ்புர பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் சுமார் 55 வயது மதிக்கத்தக்க, 5 அடி 4 அங்குலம் உயரமுடைய, நரைத்த தலைமுடியைக் கொண்ட ஒருவர் என விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் இறக்கும் போது கருப்பு நிற சட்டை மற்றும் கருப்பு நிற காற்சட்டை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சடல அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் சஹஸ்புர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
