மலையக பிரதான புகையிரத பாதையில் அமைந்துள்ள தலவாக்கலை மற்றும் வட்டகொட புகையிரத நிலையங்களின் பயணியர் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் விசேட புனரமைப்பு பணிகள், புகையிரத திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நீண்டகாலமாக காணப்பட்டு வந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில், இந்த இரு புகையிரத நிலையங்களின் பிரவேச வீதிகள் மற்றும் பயணியர் நடைமேடைகள் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்படவுள்ளன.
இந்த திட்டத்தின் மூலம் பயணிகளுக்கு பாதுகாப்பானதும் வசதியானதுமான சேவையை வழங்குவதுடன், புகையிரத நிலையங்களின் உட்கட்டமைப்பும் மேம்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
