வனாத்தவில்லு பகுதியில் தோனி ஒன்றின் உதவியுடன் பூப்பறிக்கச் சென்ற 4 பாடசாலை மாணவர்கள் எதிர்பாராத விதமாக நேற்று செவ்வாய்க்கிழமை (30) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வனாத்தவில்லு ,பண்டாரநாயக்கபுர பகுதியில் மங்களாபுர வில்லுவில் செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் அளவில் தோனி ஒன்றின் உதவியுடன் பூப் பறிப்பதற்காகச் சென்ற ஐவர் அடங்கிய மாணவர் குழுவொன்று, குறித்த தோனி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில், நீரில் மூழ்கிய ஒரு பிள்ளை மாத்திரம் நீந்திக் கரை சேர்ந்து உயிர்தப்பியுள்ளதாகப் பொலிஸார் முன்னெடுத்த ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையில், காணாமல் போன ஏனைய 4 பேரினதும் உடல்கள் மீட்கப்பட்டன.
16 வயதுடைய பண்டாரநாயக்கபுர மற்றும் மங்களாபுர பகுதியைச் சேர்ந்த சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பில் வனாத்தவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
