முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுஜீஸ்வர பண்டார, இன்று (01) புதன்கிழமை காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலை அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இரண்டு அரச நிறுவனங்களில் ஒரே நேரத்தில் சம்பளம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், கடந்த ஜூன் 18 ஆம் திகதி மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சுஜீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
