எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, சீனாவின் பொருளாதார சீர்திருத்தங்களும் வளர்ச்சி மாதிரியும் இலங்கைக்கு மதிப்புமிக்க பாடங்களை வழங்குகின்றன என தெரிவித்துள்ளார். அவர் சீனாவின் நவீனமயமாக்கல், புதுமை மற்றும் செயல்படுத்தும் திறனை பாராட்டியுள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) 105வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிட்ட செய்தியில் அவர், சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறந்த பொருளாதாரக் கொள்கைகள் அந்த நாட்டை உலகளாவிய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப சக்தியாக மாற்றியுள்ளதுடன், பகிர்ந்த வளச்செழிப்பையும் ஊக்குவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், சீனா மற்றும் இந்தியா இடையிலான அமைதியான ஒத்துழைப்பு பிராந்தியத்திற்கும் உலகளாவிய முன்னேற்றத்திற்கும் முக்கியமானது எனவும் அவர் வலியுறுத்தினார். அதேவேளை, சமகி ஜன பலவேகய மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி (CPC) இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தத் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
