மார்பகப் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவதற்காக அரச வைத்தியசாலைகளுக்கு 765 மில்லியன் ரூபா பெறுமதியான 5 அதிநவீன ‘மெமோகிராபி’ இயந்திரங்களை வழங்குவதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தலா 153 மில்லியன் ரூபாய் பெறுமதியான இவ்வியந்திரங்களுக்கான நிதியை சுகாதார தொகுதி மேம்பாட்டுத் திட்டமும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் வழங்கியுள்ளன.
இவ்வியந்திரங்கள் கொழும்பு, கண்டி, காலி கராப்பிட்டிய,அனுராதபுரம் போதனா வைத்தியசாலை மற்றும் அபெக்ஷா புற்றுநோய் வைத்தியசாலைக்கும் வழங்கப்படவுள்ளன.
இதற்கு மேலதிகமாக, அவசரத் தேவைகளுக்காக திருகோணமலை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைகளுக்கும், பயன்படுத்தப்பட்ட இரு இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன.
