சீனாவின் பியூஷன் பிராந்தியத்தில் இன்று (04) ஆறு மணிநேரத்தில் 310 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. சீனாவின் பல பிராந்தியங்களில் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாயுள்ளதுடன் வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்பட்டுள்ளது.
பியூஷன் பிராந்தியத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதனால் முழு பிராந்தியமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சீனாவின் பல பிராந்தியங்களுக்கு வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
