மட்டக்களப்பு நகரின் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைத் தொகுதிகளில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து, தீயணைப்பு படையினரின் 4 மணிநேர போராட்டத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவர் ஆடை விற்பனை நிலையம் மற்றும் கையடக்கத் தொலைபேசி திருத்தும் கடை ஆகியவை முற்றாக எரிந்து சேதமடைந்தன.
மேலும் தங்க ஆபரண கடைகள் உள்ளிட்ட 5 கடைகளும் சேதமடைந்துள்ளதுடன், குறித்த இரு வீதிகளிலும் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
