வறுமையை ஒழிப்பதற்கு குடும்பங்களை மையமாகக் கொண்ட ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் அவசியம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் அவர் இதனை வலியுறுத்தியதுடன், பல்வேறு நிறுவனங்களின் நிதிகளை ஒருங்கிணைத்து, வறிய குடும்பங்களை இலக்காகக் கொண்ட விஞ்ஞானபூர்வ திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், அஸ்வெசும பயனாளிகளை உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி, நிவாரணங்களைச் சார்ந்திருக்கும் நிலையை குறைப்பதே அரசின் நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.
