நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த நாட்களில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், நேற்று (08) மீண்டும் சிறிய அளவிலான குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
சிறை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் தலையீட்டில் நிலைமை உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டதுடன், குழப்பத்தில் ஈடுபட்ட பெண் கைதிகள் சிலர் வாரியபொல சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் 700க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மோதல்களில் உயிரிழந்த கைதிகளின் மரண விசாரணை முடிவுகள் திறந்த தீர்ப்பாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அறிக்கைகள் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
