ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக கடந்த ஏழு ஆண்டுகளாக பதவி வகித்து வந்த ஷம்மி சில்வா, வரும் புதன்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக சிங்கள பத்திரிகையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போதைய அரசாங்கத் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்கவே, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதன்முதலில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷம்மி சில்வா, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்று தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடித்தார்.
ஷம்மி சில்வாவின் விலகலைத் தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எரான் விக்ரமரத்ன, ஶ்ரீலங்கா கிரிக்கெட் வாரியத்தின் புதிய இடைக்காலத் தலைவராக (Interim President) நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
