டெங்கு அபாயம் காரணமாக மூடப்பட்ட கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்லைக்கழகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதனை மீள திறப்பதற்கு முன்னர் பல்கலைக்கழக வளாகத்தை சுத்தப்படுத்தும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் இந்த பணிகள் இடம்பெற்றன. நுளம்பு பெரும் இடங்கள் பரிசோதிக்கப்பட்டு அவை சுத்தப்படுத்தப்பட்டன.
